தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதனையடுத்து நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளார். மேலும் முதல்முறை நடிகராகவும் தான் சாணிக் காயிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சீன் ஸ்கிரீன் மீடியா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாராகும் சாணிக் காயிதம் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சாணிக் காயிதம் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் யாமினி கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில் நேற்று சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்று இயக்குனர் செல்வராகவன் சாணிக் காயிதம் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இயக்குனர் செல்வராகவன் சாணிக் காயிதம் படத்தின் டப்பிங்கில் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது