தமிழ் திரை உலகின் மிகச்சிறந்த நடிகரான சீயான் விக்ரம் அடுத்ததாக ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல்ராஜா தயாரிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முன்னதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். மேலும் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள மகான் திரைப்படத்தில், சிம்ரன், பாபிசிம்ஹா, வாணிபோஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள மகான் திரைப்படத்திலிருந்து முன்னதாக சூரையாட்டம் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் துருவ் விக்ரம் சந்தோஷ் நாராயணன் இசையில் மகான் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனை தெரிவிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் உடன் துருவ் விக்ரம் பாடல் பதிவில் இணைந்திருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…