தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும் இந்திய திரை உலகின் ஆகச் சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் தனுஷ் தற்போது முதல்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஹாலிவுட்டில் வெளிவர உள்ள திரைப்படம் தி க்ரே மேன். அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீசாகவுள்ளது.

நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பாளராகவும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் 3, எதிர்நீச்சல், காக்கா முட்டை, மாரி, விசாரணை, ப.பாண்டி, வடசென்னை உள்ளிட்ட சிறந்த படைப்புகளை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் வழங்கி வருகிறார். இதனிடையே தனுஷின் வுண்டர்பார் யூடியூப் சேனல் நேற்று (மே-17) ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹேக் செய்யப்பட்ட தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் யூடியூப் சேனலை மீட்டெடுக்க யூடியூப் இந்தியா உதவி செய்தது இந்நிலையில் இன்று (மே - 18) தற்போது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் யூடியூப் சேனல் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.