விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது ஒளிபரப்பாகி வருகிறது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாகா ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சில எலிமினேஷன்களை கடந்து புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 2 குக்களுடன் விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி சென்று வருகிறது.

இதுவரை நடக்காத வகையில் குக் வித் கோமாளியில் கடந்த வாரம் Immunity எவரும் வெல்லாமல் இருந்தனர்.இது ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அந்த வகையில் மீண்டும் இந்த வாரம் Immunity வாரம் என்பதால் அடுத்து வரும் வாரங்களில் 2 எலிமினேஷன் இருக்கும் என்று நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் அடுத்து வரும் ஏதேனும் ஒரு வாரத்தில் 2 எலிமினேஷன் எதிர்பார்க்கலாம்.

இந்த வாரம் சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியங்கா மோகன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.ஏற்கனவே ஏகப்பட்ட அறிவிப்புகளுடன் அதிர்ந்து வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக 2 பேருக்கு immunity வழங்கி குஷிப்படுத்தினார்கள் நடுவர்கள்.அடுத்த வாரம் என்ன நடக்க போகிறது என பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.