விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது ஒளிபரப்பாகி வருகிறது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாகா ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சில எலிமினேஷன்களை கடந்து விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி சென்று வருகிறது.

கடந்த வாரம் நடிகர் சந்தோஷ் பிரதாப் இந்த தொடரில் இருந்து எலிமினேட் ஆனார்.இவர் எலிமினேட் ஆனது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.தொடரில் இருந்து வெளியேறிய பின் தனது ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் , மீண்டும் வந்தால் நிச்சயம் நன்றாக சமைப்பேன் என்றும் , நிறைய படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.