வீட்டை விட்டு வெளியேறும் சேரன் ! அதிர்ச்சியில் லாஸ்லியா
By Aravind Selvam | Galatta | September 08, 2019 15:49 PM IST

சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் சேரன் வெளியேறுகிறார் என்ற சீட்டை அனைவருக்கும் காட்டுகிறார்.இதனை தொடர்ந்து சேரன் அனைவரிடமும் விடைபெறுவதாக தெரிவிக்கிறார்.லாஸ்லியா கண்கலங்கியபடி வெளியேறவேண்டியது நான் தான் என்று தெரிவிக்கிறார் அவருக்கு சேரன் ஆறுதல் தெரிவிக்கிறார்.