விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் மலர் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.பல மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது.

முதல் மூன்று சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து கொரோனா வர நான்காவது சீசன் பிக்பாஸ் தள்ளிப்போனது.ஒருவழியாக சில மாதங்களுக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் தொடரின் ஐந்தாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரியங்கா,இமான்,சிபி,பவானி ரெட்டி,வருண்,நிரூப்,தாமரை செல்வி,அபிஷேக் ராஜா என 18 போட்டியாளர்களுடன் இந்த போட்டி தொடங்கியது,சில எலிமினேஷன்கள் கடந்து விறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வருகிறது.

50 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் புது என்ட்ரியாக நடன இயக்குனர் அமீர் என்பவர் இணைந்துள்ளார்.இவரது என்ட்ரி இன்றைய ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.இவரது வருகைக்கு பிறகு வீட்டில் எப்படி பிரச்சனைகள் மாறப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துவருகின்றனர்.