பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகள் இந்த வாரம் முழுவதும் வழங்கப்பட்டது போலவே இன்றும் தொடர்ந்தது. ஏழாவது டாஸ்காக போட்டியாளர்களுக்கு பந்தை உருண்டுகொண்டே இடம்மாற்றி வைக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும்ஒருவருடன் ஒருவர் போட்டியிட வேண்டும் என சொல்லப்பட்டது.

கோழி பண்ணை டாஸ்கில் அதிக கரன்சி சேகரித்து வைத்திருந்த பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அது இன்று பாலாஜிக்கு வழங்கப்பட்டது. அவர் இந்த பந்தை இடம் மாற்றி வைக்கும் டாஸ்கில் தனக்கு எதிராக விளையாடுபவரை இவரே தெரிந்தெடுத்துகொள்ளலாம் என சொல்லப்பட்டது. இந்த டாஸ்க் தொடங்கியதும் அனைவரும் மும்முரமாக கஷ்டப்பட்டு போட்டியிட்டனர். இதில் அவர்கள் எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில் அவர்களுக்கான இடம் உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட போட்டிகள் நடந்தது.

ரம்யா அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அவருக்கு கடைசி இடம் தான் கொடுக்கப்பட்டது. அடுத்த கட்ட போட்டியில் சோம் மற்றும் கேபி இருவரும் சிறப்பாக செய்ததால் முதல் இடத்திற்கான போட்டி அவர்கள் இடையே தான் நடந்தது. அந்த போட்டியில் அவர்கள் இருவரும் சரியாக ஒரே நேரத்தில் முடித்தால் யார் வெற்றியாளர் என்பது தெரியாமல் போனது. அதன் பின் 3rd அம்பையர் மூலம் பார்த்தும் பிரயோஜனம் இல்லை. அதனால் போட்டி மீண்டும் தொடங்கியது. அதில் சோம் ஜெயித்து முதலிடம் பிடித்தார்.

பல விதமான டைட்டில்கள் மற்றும் வாக்கியங்கள் வழங்கப்பட்டு இருக்கும் என்றும், போட்டியாளார்கள் அனைவரும் கலந்து பேசி அதற்கு தகுந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அரைச்ச மாவை அறைப்போமா என்பது போல சொன்ன குறைகளையே மாற்றி மாற்றி பல கோணங்களில் ஆரி மற்றும் பாலாஜி ஆகியோரை தான் பலரும் குற்றம்சாட்டினர். அதனால் அவர்கள் படத்தில் தான் அதிக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஆரி ஒரு வாக்கியத்தை தேர்ந்தெடுத்து அது பற்றி விளக்குகிறார். அப்போது ஆரியை பேச விடாமல் ரம்யா தடுக்கிறார். நான் அப்படி சொல்லவில்லை. ஒன் சைடு என்று தான் கூறினேன் என்றார். அப்போது பேசிய ஆரி, ரம்யாவுக்கு நோஸ்கட் தந்தார். நான் பேசி முடிக்கிற வரைக்கும் நீங்க பேசக்கூடாது. அப்படி தான் ரூல் புக்கில் இருக்கு என்று எடுத்துரைத்தார். உங்கள குறை சொல்லும் போது அத ஏத்துக்குற பக்குவம் வேணும் ரம்யா என்று அழகாக எடுத்துரைத்தார் ஆரி.