இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றுகொண்டிருந்தனர். அதற்காக freeze, rewind, loop போன்ற டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. நேற்றைய நாளில் கடைசியாக ஆரியின் மகள் வந்தார். அவரை பார்த்ததும் ஆரியின் கண்களில் கண்ணீர் வெள்ளமாக வந்தது. ஆனாலும் அவர் freeze டாஸ்கில் இருந்ததால் அசையவில்லை. 

மகளை இத்தனை நாட்களுக்கு பின்னர் பார்த்தபிறகும் அவரை கட்டியணைக்காமல் அவர் டாஸ்கில் தான் கவனம் செலுத்தினார். அதன் பின் பிக் பாஸ் தான் ஆரியை ரிலீஸ் செய்தார். அதன் பின் தான் அவர் மகளுடன் பேச தொடங்கினார். வீட்டை சுற்றி பார்ப்பதிலும், மற்ற போட்டியாளர்களிடமும் செம கியூட்டாக விளையாடினார் ரியா. அதன் பின் கன்பெக்ஷன் ரூமில் இருந்து ஆரியின் மனைவி வந்தார். 

ஆரி வீட்டில் இருப்பது போலவே இங்கும் நேர்மையாக இருப்பதாக அவர் ஆரியை பாராட்டினார். ஆனால் சில நேரங்களில் ஆரி சோகம் அடைந்துவிடுவதை பார்க்க முடியவில்லை எனவும், யாரவது பேசினால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனவும் அவர் அட்வைஸ் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று இந்த வாரத்தின் மோசமான performerஐ தேர்வு செய்வதற்காக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாலாஜிக்கு ஆரிக்கும் பெரிய அளவில் சண்டை வெடித்து இருக்கிறது. பாலாஜியை நாமினேட் செய்யும் போது ஆரி அதற்க்கு முந்தைய வாரங்கள் நடந்தது பற்றி அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட பாலாஜி இந்த வாரத்தை பத்தி மட்டும் பேசுங்க என கூறினார். 

நான் என்ன சொல்லணும் என்பதை நீ சொல்ல தேவையில்லை என பதிலடி கொடுத்தார் ஆரி. அதன் பிறகும் பாலாஜி பேசி கொண்டு இருந்தபோது டே வந்து சொல்லு டா என கோபமாக சொல்லிவிட்டார். அப்போது எழுந்து வந்த பாலாஜி இப்போ நீங்க ஒரு மாதிரி பேசுனீங்கல.. அதை பொறுத்துக் கொண்டிருந்தேன் இதற்கு முன்னாடி. இனி பொறுத்துக்க முடியாது என ஆரியின் முகத்திற்கு நேராகவே கூறிவிட்டார். இந்த சண்டை பெரிய அளவில் இன்று வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.