பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். கடந்த வாரம் தீபாவளி காரணமாக எலிமினேஷன் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத இதுவரை அதற்கான காரணத்தை சொல்லி நாமிநேட் செய்தனர். குறிப்பாக அனிதா சம்பத் மற்றும் சுசித்ராவை பலரும் நாமினேட் செய்தார்கள். 

அது மட்டுமின்றி பாலாஜி முருகதாஸிற்கு காதல் கண்ணை மறைக்கிறது என்றும் குறிப்பிட்டு சிலர் நாமினேட் செய்தனர். நாமினேஷன் எப்படி நடந்தது என்று முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்த நிலையில், நாமினேட் ஆனவர்கள் யார் யார் என்பதை அறிவிக்கப்படுவது இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது. 

அதில் பாலாஜி காதல் கண்ணை மறைக்கிறது என சொன்ன காரணமும் குறிப்பிட்ட பிக்பாஸ் அறிவிப்பை வெளியிடுகிறார். இதனால் பாலாஜி கோபம் அடைவது தெளிவாக ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. கேட்டுக்கங்க பா இங்க காதல் எல்லாம் ஒன்னும் பண்ணல. அது போன்ற எண்ணம் இருந்தால், அது பற்றி நான் காதில் கேட்டால், ஏதாவது கேட்பேன்....என அனைவரிடமும் கோபத்துடன் தெரிவித்துவிட்டு கிளம்பிச் செல்கிறார். 

அதன் பின் பெட்ரூமில் ஷிவானியிடம் பாலாஜி பேசும் போது, ஒரு வேளை காதல் வந்தால் நான் உன்னிடம் சொல்கிறேன் சரியா. அது வராது.. வந்தால் சொல்கிறேன் என பாலாஜி தெரிவிக்கிறார். அதனால் பாலாஜி மற்றும் சிவானி இடையே இருப்பது உண்மையில் காதல் தானா என்ற சந்தேகம் நமக்குள் எழத்தான் செய்கிறது. 

இவர்கள் காதல் பற்றி மற்ற போட்டியாளர்கள் தற்போது பேச தொடங்கி இருக்கிறார்கள் என்பதால் வரும் நாட்களில் இது பற்றிய தெளிவான விளக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது ஒருபுறம் இருக்க ஆரியின் செயலால் அதிருப்தி ஆகிறாரா பாலாஜி என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. டார்கெட் செய்யப்பட்ட அனிதா மற்றும் சுசித்ராவின் நிலை என்னவென்பதை அடுத்த ப்ரோமோவில் பார்ப்போம்.