விஜய் டிவியில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் கவிதா கௌடா.இதனை தொடர்ந்து கன்னடத்தில் ஒளிபரப்பான லக்ஷ்மி பிரம்மா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் கவிதா கௌடா.இதனை தவிர சில கன்னட சீரியல்களில் நடித்திருந்தார் கவிதா.

தமிழில் நீலி தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் கவிதா கௌடா.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் இவர் ஒரு ஹீரோயினாக நடிக்கவிருந்தார் ஆனால் சில காரணங்களால் இவர் நடிக்கமுடியாமல் போனது.இதனை தவிர சில படங்களிலும் நடித்து அசத்தி இருந்தார்.

கன்னட பிக்பாஸ் தொடரில் பங்கேற்ற கவிதா பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவராக மாறினார்.இவர் நடித்த லக்ஷ்மி பிரம்மா தொடரில் இவருடன் இணைந்து நடித்தவர் சந்தன்குமார்,பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார் சந்தன்.இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.

இருவருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்க கடந்த மே 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.குக் வித் கிறுக்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றனர்.இந்த லாக்டவுன் நேரத்தில் பலரும் பிட் ஆனது குறித்து பதிவு செய்து வருகின்றனர்,ஆனால் பலரும் குண்டாகியுள்ளனர் அதில் நானும் ஒருவன் என்று தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சந்தன்.