சமீப காலமாக திரையுலகினர் மர்மமான முறையில் தற்கொலை செய்வது வழக்கமாகி கொண்டே வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடந்தேறும் போது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் இது போன்று முன்னதாக பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை மிகபெரிய மர்மத்தை ஏற்படுத்தியது இன்று வரை அவர் மரணத்திற்கு சரியான விளக்கம் முடிவு பெறாமல் உள்ளது. இவர் மரணமில்லாமல் பல மர்மங்கள் திரையுலகில் நடந்தேறி வருகிறது.
இந்நிலையில் பிரபல போஜ்புரி நடிகர் ஆகன்ஷா துபே வாரணாசியில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவயதிலிருந்தே நடனம் மற்றும் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஆகன்ஷா தனது 17 வயதில் ‘மேரி ஜங் மேரா ஃபைஸ்லா’ என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலே ரசிகர்களின் கவனம் பெற்ற ஆகன்ஷா பின் தொடர்ந்து 'முஜ்சே ஷாதி கரோகி' (போஜ்புரி), 'வீரன் கே வீர்', 'ஃபைட்டர் கிங்', 'கசம் பைடா கர்னே கி 2' மற்றும் பல படங்களில் நடித்து வந்தார். நாயக் என்ற படத்திற்காக வாரணாசி வந்த ஆகன்ஷா நட்சத்திர விடுதியில் தங்கிருந்தார்.
பிறந்த நாள் விழா ஒன்றில் கலந்து கொண்டு பின் அறைக்கு திரும்பினார் நடிகை ஆகன்ஷா மறுநாள் காலை மேக்கப் மேன் அழைப்பை எடுக்காமல் இருந்த ஆகன்ஷா குறித்து ஓட்டல் நிர்வாகியிடம் இது குறித்து தெரவித்திருந்தார். பின் அறையை திறந்து பார்த்த போது அறையில் இருந்த மின்விசிறியில் நடிகை ஆகன்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. பின் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு பின் உடலை மீட்டு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகை ஆகன்ஷா தூபே இறப்பதற்கு முன்னிரவு இன்ஸ்டாகிராமில் நேரலையில் வந்துள்ளார். நேரலையில் எதுவும் பேசாமல் இருந்த ஆகண்ஷாவினை ரசிகர்கள் என்ன நடந்தது என்ன என்று கேள்விகளை எழுப்பினர் அதற்கு எதுவும் பேசாமல் இருந்துள்ளார். தற்கொலைக்கு பின்னணி என்ன என்பதை போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். நடிகை ஆகன்ஷா கடந்த காதலர் தினத்தன்று நடிகர் சமர் சிங் அவர்களை காதலிப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போஜிபுரியில் வளர்ந்து வரும் இளம் நடிகையில் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.