இயக்குனர் நலன் குமாரசாமியின் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து பலவிதமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அசோக்செல்வன். அந்தவகையில் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் நித்தம் ஒரு வானம்.

அறிமுக இயக்குனர் Ra.கார்த்திக் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தமிழில் நித்தம் ஒரு வானம், தெலுங்கில் ஆகாஷம் என்ற பெயரில் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, இத்திரைப்படத்தில் வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று கதாபாத்திரங்களில் அசோக்செல்வன் நடித்துள்ளார். 

அசோக் செல்வனுடன் இணைந்து ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷ்வதா, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் கதாநாயகிகளாக முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி நித்தம் ஒரு வானம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நித்தம் ஒரு வானம் திரைப்படத்திலிருந்து உனக்கென நான் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தீப்தி சுரேஷ் மற்றும் தீபக் இணைந்து பாடியுள்ள இப்பாடலை பாடலாசிரியர் கிருத்திகா நெல்சன் எழுதியுள்ளார். அந்தப் பாடல் இதோ…