தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன், இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர்.

முன்னதாக இந்த ஆண்டில் (2022) மட்டும் அசோக்செல்வன் நடிப்பில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் மன்மதலீலை ஹாஸ்டல் மற்றும் வேழம் ஆகிய நான்கு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் நிலையில் ஐந்தாவது திரைப்படமாக அசோக்செல்வன் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுக இயக்குனர் Ra.கார்த்திக் இயக்கத்தில் தமிழில் நித்தம் ஒரு வானம், தெலுங்கில் ஆகாஷம் என்ற பெயரில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள அசோக் செல்வனுடன் இணைந்து ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷ்வதா, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் கதாநாயகிகளாக முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் நித்தம் ஒரு வானம் திரைப்படத்திலிருந்து பாதி நீ பாதி நான் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரொமான்டிக்கான அந்த பாடல் இதோ…