தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் களத்தில் சந்திப்போம். நடிகர்கள் ஜீவா மற்றும் அருள்நிதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த களத்தில் சந்திப்போம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹாரர் த்ரில்லர், கிரைம் த்ரில்லர், ஆக்ஷன் த்ரில்லர், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என பலவிதமான படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அருள்நிதி நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் D-BLOCK. முன்னதாக இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படமும் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது. 

இதனிடையே அடுத்த க்ரைம் த்ரில்லர் படமாக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் தேஜாவு. இப்படத்தில் அருள்நிதி உடன் இணைந்து மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், அச்சுத் விஜய், சேத்தன், மைம் கோபி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஒயிட் கார்பட் பிலிம்ஸ் மற்றும் பி.ஜி.மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ள தேஜாவு படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  முன்னதாக வெளிவந்த தேஜாவு படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தேஜாவு படத்திற்கு சென்சாரில் U/A சான்றியழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.