விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து விஜய் டிவியின் அரண்மனை கிளி ஷூட்டிங் தொடங்கவில்லை.சில காரணங்களால் இந்த தொடர் கைவிடப்பட்டது என்ற தகவல் வெளியானது.இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

இந்த தொடரின் நாயகி மோனிஷா பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.அவ்வப்போது தனது நடன வீடியோக்களை ரசிகர்களுடன் பதிவிட்டு மகிழ்ந்து வந்தார் மோனிஷா.தற்போது இவர் தமிழ் சீரியலில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஜீ தமிழின் செம ஹிட் தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.இந்த தொடரில் மோனிஷா புது எண்ட்ரியாக வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரின் நாயகி ரேஷ்மா,புதிய சீரியலில் நடிக்கவிருப்பதால் அவர் தொடர்வாரா விலகுகிறாரா என்பது இன்னும் தெளிவாகாத பட்சத்தில், மோனிஷா என்ட்ரி கொடுக்கவுள்ளதால் ,ரேஷ்மாவிற்கு பதிலாக வருகிறாரா அல்லது புதிய கேரக்டரில் வருகிறாரா போன்ற பல குழப்பங்கள் உள்ளன.இதுகுறித்து ஜீ தமிழ் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.