தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத்.தனது சூப்பர்ஹிட் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து , ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் அனிருத்.

கடந்த சில வருடங்களாக பெரிய ஹீரோக்களின் படங்கள் அனிருத் இசை இல்லாமல் வெளிவருவதில்லை , பல படங்களுக்கு பக்கபலமாக அனிருத் இருந்துள்ளார்.பீஸ்ட்,டான்,காத்துவாக்குல ரெண்டு காதல்,விக்ரம்,திருச்சிற்றம்பலம் என வரிசையாக இவர் இசையமைத்த படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.

அடுத்ததாக AK 62,இந்தியன் 2,தலைவர் 169 என பல முக்கிய படங்களுக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் அனிருத் ரசிகர்களுடன் எப்போதும் டச்சில் இருப்பார்.தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இதுவரை பல வெளிநாடுகளில் தனது இசை கச்சேரிகளை நடத்தி அசத்தியுள்ளார்.இவர் எப்போது தனது இசை கச்சேரியை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடத்தப்போகிறார் என பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.தற்போது இந்தியாவில் தனது முதல் இசை கச்சேரி சென்னை மற்றும் கோயம்பத்தூரில் செப்டம்பர் , அக்டோபரில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.இதனை அடுத்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.