தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அனன்யா நாகல்லா.தெலுங்கில் சில படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் , பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்தில் நடித்து பிரபலமானவராக மாறினார்.

அடுத்ததாக சமந்தாவின் சகுந்தலம் உள்ளிட்ட  சில முக்கிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அனன்யா நாகல்லா.தெலுங்கு மட்டுமின்றி சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவிலும் தனது என்ட்ரியை கொடுக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.சமூகவலைத்தளங்களில் இவருக்கு திருமணமாக போவதாக சில வதந்திகள் பரவி வந்தன.

அதனை கவனித்த இவர் , எனக்காக ஒரு மாப்பிள்ளையை பார்த்ததற்கு நன்றி , அப்படியே கல்யாணம் எங்கு எப்போது என்று சொன்னால் என்னுடைய நானும் கலந்துகொள்வேன் என ஜாலியாக அந்த வதந்தியை மறுத்துள்ளார்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ananya nagalla reply to wedding rumors vakeel saab heroine shaakuntalam