மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
By Anand S | Galatta | March 07, 2022 16:22 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதனை அடுத்து கௌதம் கார்த்திக், விவேக், ப்ரியா ஆனந்த் & டாப்ஸி ஆகியோர் இணைந்து நடித்த வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார்.
கடைசியாக சினிமா வீரன் எனும் டாக்குமென்ட்ரி திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது முஸாஃபிர் எனும் புதிய ஆல்பம் பாடலை இயற்றியுள்ளார். ஹிந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் என 4 மொழிகளில் தயாராகியுள்ள இப்பாடல் வருகிற மார்ச் 8ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து இயக்குனராக தனது பாடலின் பணிகளை தொடங்கினார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, "வாழ்க்கை கோவிட்க்கு முன் கோவிட்க்கு பின் என ஆகிவிட்டது காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அந்த இன்ஸ்டாகிராம் பதிவு இதோ…