வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், பிரபலங்கள், சாதாரண மக்கள் என்று பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதே சமயம் கங்கனா ரனாவத் உள்ளிட்ட ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் அச்சு அசலாக ஒரே மாதிரி ட்வீட் செய்தார்கள். 

அதை பார்த்தவர்களோ, பிரபலங்களின் பதிவுகளை கிண்டல் செய்து வந்தனர். மேலும் விவசாயிகள் போராட்டம் பற்றி அமெரிக்க பாடகி ரிஹானா போட்ட ட்வீட் வைரலானது. அதை பார்த்த கங்கனா ரிஹானாவை விளாசினார். இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையானது. 

அந்த ட்வீட்டில் சச்சின் கூறியிருந்ததாவது, இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளி சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்பாளர்களாக அல்ல. இந்தியர்களுக்கு தான் இந்தியாவை பற்றி தெரியும், இந்தியாவுக்காக முடிவு எடுக்கணும். ஒரு நாடாக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றார்.

சச்சினின் ட்வீட்டை பார்த்த பலரும் கொந்தளித்தனர். கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சினை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ் கிளம்பியது. மேலும் அரசியல் தலைவர்களும் சச்சின் ட்வீட்டால் அதிருப்தி அடைந்தார்கள்.

இந்நிலையில் நடிகை ரோஹினி சச்சினை விமர்சித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கிரிக்கெட் மட்டைய சாப்பிடுவியா சச்சின்? அதுவும் ஒரு விவசாயி வளர்த்த மரத்திலிருந்து தான் வந்தது என்று தெரிவித்துள்ளார்.

ரோஹினியின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் சிலர் பாராட்டியுள்ளனர். மேலும் சிலரோ, அது என்ன பொசுக்கென்று சச்சினை மரியாதை இல்லாமல் பேசிவிட்டீர்கள். ஆயிரம் தான் இருந்தாலும் அந்த மனிதர் மரியாதைக்குரியவர். ஒரு ட்வீட் போட்டதால் இப்படி அவரை தரக்குறைவாக பேசுவது சரியில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். இது நிஜமாகவே ரோஹினியின் ஃபேஸ்புக் பக்கம் தானா என சிலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர். 

 

actress rohini raises question to sachin tendulkar over farmers protest