தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நாயகிகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கர்ப்பமாக இருந்த காஜல் அகர்வால் தற்போது அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

இந்திய திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் ரசிகர்களும் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தனது செல்ல மகனுக்கு நீல் கிச்சுலு என காஜல் அகர்வால் பெயர் சூட்டினார். இந்நிலையில் பிரசவத்திற்கு பின்பு முதல் முறையாக தனது சமூக வலைதளங்களில் பிரசவம் குறித்த அனுபவங்களை காஜல் அகர்வால் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், தனது செல்ல மகன் நீல்-ஐ இந்த உலகிற்கு வரவேற்பதாக தெரிவித்து, குழந்தை பிறந்த சில வினாடிகளில் தொப்புள் கொடியோடு தனது மார்பில் தாங்கியது குறித்தும் அந்த நொடியில் உணர்ந்த சொல்லில் அடங்காத உணர்வுகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரசவத்திற்கு முந்தைய கடைசி மூன்று நாட்களில் தூக்கமில்லாத இரவுகள் குறித்தும் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பிரசவத்தின் பின் எதிர்கொள்ளவிருக்கும் நிகழ்வுகள் குறித்தும் காஜல் அகர்வால் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். காஜல் அகர்வாலின் அந்த முழுப்பதிவை கீழ் உள்ள லிங்கில் காணலாம்.