தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் முன்னணி நட்சத்திர நடிகராகவும் வலம் வரும் தளபதி விஜய் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வாரிசு படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வெளியிடும் வாரிசு படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகர் ஷாம் தளபதி விஜய் அவர்கள் குறித்தும், அவருடன் இணைந்து பணியாற்றியது குறித்தும், வாரிசு திரைப்படம் குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பேசும் போது, “பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாததால் தளபதி விஜயின் மேடை பேச்சை கேட்க முடியாமல் போனது. அப்போது நான் விஜய் அண்ணாவிடம் கேட்டிருந்தேன் இல்லை இந்த முறை தனியாக ஒரு சிறப்பு பேட்டி வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்” என விஜய் சொன்னதாக தெரிவித்த நடிகர் ஷாம் தொடர்ந்து பேசும்போது, “ஆனால் இந்த முறை வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் தளபதி விஜயின் பேச்சுக்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன். நானும் காத்திருக்கிறேன் அனைவரும் காத்திருக்கிறார்கள். வருகிற டிசம்பர் 24ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.” என ஷாம் தெரிவித்துள்ளார். ஷாம் பகிர்ந்து கொண்ட இந்த தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் ஷாமின் அந்த முழு பேட்டி இதோ…