விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2 ! தயாரிப்பாளர் வெளிப்படை
By Aravind Selvam | Galatta | March 17, 2019 17:51 PM IST
ஒரு சில படங்கள் தியேட்டரில் பெரிதாக ஓடாவிட்டாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கும் அப்படி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் ஆயிரத்தில் ஒருவன்.செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டது.கார்த்தி,ரீமா சென்,ஆண்ட்ரியா,பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார்.
தற்போது திரையரங்குகளில் நிலவி வரும் ப்ளேபேக் டிரண்ட் மூலம் சென்னை ஜீ.கே.சினிமாவில் சிறப்பு காட்சி போடப்பட்டது.இந்த காட்சியை காண ரசிகர்கள் ஆவலோடு வந்திருந்தனர்.ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு காட்சியை காண படத்தின் தயாரிப்பாளர் ரவிந்திரனும் வந்திருந்தார் அப்போது நம் கலாட்டா நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் செல்வராகவன் தன்னிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றி பல முறை சொல்லியிருக்கிறார் என்றும் அதற்கான நேரம் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார்.இதையடுத்து சினிமா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.