எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அஸ்வின் காக்குமனு, நிழல்கள் ரவி, கிஷோர், ரியாஸ் கான், லால், நாசர், மோகன் ராமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட முதல் பாடலாக பொன்னி நதி பாடல் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஏ ன.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பொன்னி நதி பாடலை ரசிகர்கள் முன்னிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பொன்னி நதி பாடலை ரசிகர்கள் ஆரவாரத்தோடு ரசித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் முன் பொன்னி நதி பாடலை பாடிய அந்த வீடியோ இதோ…