நம்மை காக்கும் 48 என்கிற “இன்னுயிர் காப்போம்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குட்டி கதையின் மூலம் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் பல பகுதிகளிலும் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகிறது என்றாலும், தமிழகத்தில் இன்னும் சற்று கூடதலான விபத்துகளே நடப்பதாகவும் கூறப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தான் தமிழகத்தில் விபத்துக்களால் நிகழும் உயிர் இழப்புகளைத் தவிர்க்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்” என்கிற புதிய மருத்துவ உதவி திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சற்று முன்பாகத் தொடங்கி வைத்தார்.

அதன்படி, செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இந்த இன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதே  இந்த இன்னுயிர் காப்போம்   திட்டமாகுமு். 

இந்த திட்டமானது, தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் செய்லபடுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் படி, “எதிர்பாரத விதமாக விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மருத்துவமனைகளில்  சிகிச்சை அளித்து சிகிச்சை கட்டணத்தில் 1 லட்சம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பிறகு விழாவில் பேசிய முதல்மைச்சர் மு.க ஸ்டாலின், “உடனடியாக உதவ கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இன்னுயிர் காப்போம் திட்டம்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது என்றும், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு” என்றும், குறிப்பிட்ட முதலமைச்சர், “சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பு ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது” என்றும், கவலையும் தெரிவித்தார்.

மேலும், “சாலை விபத்துக்களில் பெரும்பாலும் இளம் வயதினர் உயிரிழக்கின்றனர் என்றும்,  சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக, “சாலை விபத்துக்களில் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை குறைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது என்றும்,  எந்த மாநிலம் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் கூறினார்.

முக்கியமாக, “48 மணி நேரத்திற்கு பிறகும் சிகிச்சை தேவைப்பட்டால் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், விபத்து ஏற்படக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நோக்கம் என்றும், இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட்  அணிய வேண்டும்” என்றும், அவர் வற்புறுத்திக் கேட்டுகொண்டார்.

அப்போது, “பெற்றோர்கள் மகன்கள் கேட்கும் விலை உயர்ந்த இருசக்கார வாகனத்தை வாங்கி தருவது பற்றியும், ஆனால் கார் விலைக்கு விறக்கப்படும் இருசக்கர வாகனத்தை ஓட்ட முறையான பயிற்சிகள் மற்றும் சில முறைகள் இருப்பது பற்றியும்” பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் முதலமைச்சர் ஒரு குட்டி கதையுடன் அறிவுரையும் வழங்கினார்.