50 க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் உல்லாசமாக இருந்து விட்டு, அவர்களை மிரட்டி நகை, பணம் பறித்து வந்த உளவுத்துறையின் மகனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கானத்தூர் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “நான் மேட்ரிமோனியல் வாயிலாக திருமணத்திற்காகப் பதிவு செய்திருந்தேன் என்றும், 25 வயதான சூர்யா என்ற இளைஞரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது என்றும், பி.டெக் பட்டதாரியான அவர் பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்” என்றும், அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அத்துடன், “என்னை செல்போனில் தொடர்பு கொண்டு திருமணம் செய்ய விரும்புவதாக ஆசை வாட்டிய அந்த சூர்யா, என்னிடம் நெருங்கிப் பழகினார் என்றும், இதனையடுத்து, நாங்கள் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துப் பேசி வந்தோம் என்றும், பிறகு ஒருநாள் தனியார் விடுதியில் அறை எடுத்து என்னுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு, அதை வீடியோவாகவும் அவர் எடுத்து வைத்துக்கொண்டார்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

“அடுத்த சில நாட்களில் நிலம் வாங்கித் தருவதாக கூறி காரில் என்னை அழைத்துச் சென்று 7 லட்ச ரூபாயை மோசடி செய்து விட்டு, தற்போது அவர் தலைமறைவாகி உள்ளதாகவும்” அந்த புகாரில் பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, சூர்யாவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போது, கோவையில் உள்ள விடுதியில் சூர்யா தங்கியிருப்பது தெரிய வந்தது. 

இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார், கோவைக்கு சென்றனர். அப்போது, அங்குள்ள தனியார் விடுதியில் ஒரு இளம் பெண்ணுடன் சூர்யா தங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், அவரை பிடித்து விசாரித்த போது, “திருமண தகவல் வெப்சைட் மூலமாக பதிவு செய்துகொண்டு, 50 க்கும் மேற்பட்ட இளம் பெண்களைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, இது போன்று தனியார் விடுதிக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதும், அந்த உல்லாச காட்சிகளைத் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அதனை வைத்து அவர்களிடம் பல லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரனுக்கு மேல் பறித்துக்கொண்டதும்” விசாரணையில் தெரிய வந்தது.

சூர்யாவின் வாக்குமூலத்தைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

பின்னர்,  சூர்யாவிடம் இருந்து சொகுசு கார் மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

குறிப்பாக, 50 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி பணம் பறித்து வந்த இந்த சூர்யா, ஆந்திராவில் மத்திய உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் ஒரு உயர் அதிகாரியின் மகன்” என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, விசாரணைக்குப் பிறகு, சூர்யாவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப் படி, அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.