கர்நாடகாவில் ஏற்பட்டு வரும் தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அப்படி ஓர் அணையான, மேட்டூர் அணையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் உயிர்நாடியான ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் சேமிப்பு திங்களன்று பாதி வழியைத் தாண்டியது. அதன் மொத்த கொள்ளளவில் 54.833 டி.எம்.சி.டி. நீர் நிரம்பி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகளிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுகிறது. 

பிரிட்டிஷ் ஆட்சியால் கட்டப்பட்ட 86 ஆண்டுகள் பழமையான மேட்டூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் மொத்தமுள்ள 120 அடியில் 91.930 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,29,000 டிஎம்சியாக உள்ளது. அதேபோல அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக உள்ளது. 

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி நீர்த் தேக்கங்களிலிருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் சேமிப்பும் சீராக அதிகரித்து வருகின்றன.

காவிரி நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து வருவதால் நீர்த்தேக்கங்களில் தொடர்ந்து அதிக அளவு தண்ணீரை நிரம்பி வருகின்றன.

காவேரி நதி உற்பத்தியாகும் கர்நாடகாவின் தலகவேரியிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி பூம்பூஹார் அருகே கடலில் கலக்கிறது. எனவே காவேரி ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் பொதுமக்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் காவிரி நதியின் நுழைவு இடமான பிலிகுண்டுலுவில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் 1.29 லட்சம் கன அடி நீர் வரத்து இருந்தது. கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களிலிருந்து பெருமளவில் வெளியேற்றப்படுவதால் 86 ஆண்டுகள் பழமையான மேட்டூர் அணையின் நீர்மட்டம் வரும் நாட்களில் முழு கொள்ளளவு எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

டெல்டா பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணை (Mettur dam) கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை முழு கொள்ளளவை எட்டியது. டெல்டா பிராந்தியத்தில் நெல் மற்றும் பிற பயிர்களை பயிரிடும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர் மட்டுமே ஆதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து ஆக.14ந்தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

`105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் தற்போது 101.10 அடி நீர் உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து ஆக.14ந்தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். 120 நாட்களுக்கு திறக்கப்படும் 23,846,40 மில்லியன் கனஅடி நீரால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பவானிசாகர் அணையில் நீர் திறக்கப்படுவதால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர்'

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.