தமிழக அரசின் டான்செம் நிறுவனம் குறைந்த விலையில் “வலிமை” என்கிற பெயரில் விறபனைக்கு கொண்டுவரவுள்ள சிமென்ட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் சிமெண்ட் விலை கொரோனா ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு புதிய உச்சத்தில் இருந்து வருகிறது. 

அதாவது, கடந்த மார்ச் மாதத்தில் ஒரு மூட்டை சிமெண்டின் விலையானது 420 ரூபாயாக இருந்த நிலையில், அடுத்த 3 மாதங்களிலேயே சிமெண்ட் விலை ஒரு மூட்டை 490 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இப்படியான சூழலில், சிமெண்டின் விலையை கட்டுப்படுத்த தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதற்கு பிறகு, ஒரு மூட்டை 20 முதல் 40 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. 

அத்துடன், நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மீண்டும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டு 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதனால், தமிழக அரசு சார்பில் சிமெண்ட் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தது.

இதையடுத்து, “வலிமை” என்கிற வணிகப் பெயருடன் குறைந்த விலையில் சிமெண்ட் வெளி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று, தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், தமிழக அரசின் மலிவு விலை சிமென்ட்டான “வலிமை” என்கிற சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

அதாவது, தமிழக அரசின் டான்சென்  நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த “வலிமை” சிமெண்ட் முதலமைச்சர் முறைப்படி இன்று சந்தை படுத்தினார். 

“வலியதோர் உலகம் செய்வோம்” எனும் கருத்தை மையமாக கொண்டு, குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் இந்த சிமெண்ட் உருவாகி உள்ளதாகவும், இதன் மூலமாக வெளி சந்தையில் சிமெண்ட் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பாக விற்பனை செய்யப்படும் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு 350 ரூபாயாக உள்ளது. இது தனியார் சிமெண்ட்டை விட 90 ரூபாய் குறைவாக உள்ளதால், தமிழகத்தில் விறப்பனையாகும் மற்ற சிமெண்டின் விலையும் படிப்படியாக குறையும்எ ன்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.