சென்னை அடையாற்றில் தீயணைப்புத்துறையினர் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டனர்.

policeசென்னையில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 நட்டகளாக பெய்துவருகிறது. சென்னையில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்து ஆங்காங்கே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை வெள்ளம் அதிகரிப்பால் அடையாறு மேம்பாலத்தில் தண்ணீர் அதிகளவு பெருக்கெடுத்தது.

இந்நிலையில் இன்று மதியம் 12.45 மணியளவில் அடையாறு மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வகையில்  ஒரு  ஆண் சடலம் ஒன்று மிதந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர் அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆண் சடலம் ஒன்று மிதப்பாகத்தை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த அடையாறு  காவல் நிலைய காவலர்கள் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்புத்துறையினர் காவல் ஆணையர் திரு.இன்பராஜ் தலைமையில்  ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி சடலத்தை மீட்டினார்கள் .

தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் . இறந்த அந்த நபர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் என்பதால் இதுகுறித்து மேலும் இச்சம்பவம் தொடர்பாக அடையாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இறந்தவர்  யார் எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலையா அல்லது கொலையா என தீவிர விசாரணையை  போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.