பள்ளி மாணவனோடு வீட்டை விட்டு ஓடிப்போய் ரகசிய திருமணம் செய்து, கடந்த ஒரு மாதமாக குடும்பம் நடத்தி வந்த பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். 

திருச்சி மாவட்டத்தில் தான்,  இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி கிராமத்தைச் சோ்ந்த ஞானமலா் என்பவரின் 17 வயது மகன் ஒருவர், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தான், கடந்த 5 ஆம் தேதி விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவன், இரவு நீண்ட நேரம் ஆகியும் அந்த மாணவன் வீடு திரும்பவில்லை.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த மாணவினின் நண்பர்களின் வீடு உள்ளிட்ட அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து உள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அந்த மாணவன் கிடைக்காத நிலையில், இது குறித்து அந்த மாணவனின் நண்பர்களிடம் அவர்கள் விசாரித்து உள்ளனர். அப்போது, அந்த மாணவன், “நண்பர்களுடன் விளையாட செல்லவில்லை” என்பது தெரிய வந்தது.

குறிப்பாக, “அந்த மாணவன் அதே பள்ளியில் பணியாற்றும் அந்த மாணவனின் வகுப்பு ஆசிரியையான 26 வயதான சர்மிளா டீச்சருடன் வீட்டை விட்டு மாயமானதாக” கூறப்படுகிறது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவனின் பெற்றோர், துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, மாணவர் காணாமல் போன அன்றே, குறிப்பிட்ட அந்த வகுப்பு ஆசிரியையும் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

முக்கியமாக, அந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த சிக்கந்தம்பூர் பகுதியை சோ்ந்த சர்மிளா உடன், அந்த மாணவன் சென்றிருக்கலாம் என்று, சந்தேகப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

எனினும், மாணவரும் ஆசிரியையும் ஒரே நாளில் மாயமாகி உள்ளதால் இருவரும், சேர்ந்து வீட்டை விட்டு ஓடியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தான், மாயமான ஆசிரியை சர்மிளாவின் செல்போன் ஐஎம்ஈஐ நம்பரை வைத்து, அந்த நம்பரில் தற்போது உள்ள சிம்கார்ட் நம்பரை டிராக் செய்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அதன் படி, பள்ளி மாணவனோடு வீட்டை விட்டு ஓடிப்போன அந்த டீச்சர் “திருச்சி, தஞ்சாவூர், நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர் ஆகிய இடங்களில் மாறி மாறி, அவரின் புதிய சொல்போன் எண்ணின் சிக்னல்” காட்டி உள்ளது.

முக்கியமாக, அந்த டீச்சரின் செல்போன் எண் கடைசியாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியையின் தோழி வீட்டில் இருந்து அந்த சிக்னல் காட்டி கொடுத்திருக்கிறது. 

இதனையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ், விசாரணை நடத்தியதில் “அந்த டீச்சரின் தோழி வீட்டில்தான் பள்ளி மாணவனோடு ஓடிப்போன அந்த ஆசிரியையும் இருந்திருக்கிறார். 

இதனையடுத்து, அந்த பள்ளி மாணவனை மீட்ட போலீசார், அந்த டீச்சரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 

இந்த விசாரணையில், “தஞ்சாவூர் கோயிலில் வைத்து தாலி கட்டிக்கொண்டு இருவரும் திருமணம் செய்தது தெரிய வந்திருக்கிறது”. 

குறிப்பாக, இருவரும் திருமணம் செய்துகொண்ட பிறகு, தோழியின் வீட்டில் அந்த மாணவனுடன், இந்த டீச்சர்  கடந்த ஒரு மாத காலமாக குடும்பம் நடத்தி வந்ததும், தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து, போலீசார் அந்த மாணவனையும் ஆசிரியை சர்மிளாவையும் துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாகவே, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காவேரி, ஆசிரியை சர்மிளாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

இதனிடையே, பள்ளி மாணவனை ரகசிய திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.