சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

IPL 2022

2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஒப்படைக்க நேற்று கடைசி நாளாகும். நேற்று இரவு 9.30 மணிக்கு அவை அறிவிக்கப்பட்டுயிருந்தது. 

அதனைத்தொடர்ந்து ஐ.பி.எல் அணிகளுக்கு வழங்கப்பட்ட ரிட்டன்ஷன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் 3 அணிகள் தக்கவைக்கப்போகும் பட்டியல் வெளியாகியுள்ளது.  ஐ.பி.எல். 2022-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

இந்நிலையில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைக்கபட்டனர் என்பது குறித்த இறுதி பட்டியல் நேற்று வெளியானது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே தனது முதல் தேர்வாக எம்.எஸ்.தோனியை தக்கவைத்துவிட்டது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா ரூபாய் பதினாறு கோடிக்கும் ,  எம்எஸ் தோனி ரூபாய் பனிரெண்டு கோடிக்கும், மொயீன் அலி ரூபாய் எட்டு கோடிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் ரூபாய் ஆறு கோடிக்கும் ஆகியோரை தக்கவைத்து கொண்டது. இந்த நிலையில் சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை அணியின் கேப்டன் தல தோனி   ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் காட்சி இடம்பெற்றுள்ளது.