“தமிழ்நாட்டில் மிக பயங்கர பிரளயம் வரப்போகிறது” என்று, பெய் சாமியார் ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பல இயற்கை சீற்றங்களை பார்த்திருக்கிறது. சுனாமி, புயல், கனமழை, கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கொரோனா போன்ற கொடிய நோய்கள் உள்ளிட்ட பல இயற்கை சீற்றங்களைப் பார்த்த தற்போதைய இதே தலைமுறை தான், பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல அரசியல் சிக்கல்களையும் கண்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் சாமியார் ஒருவர், வாய்க்கு வந்ததை எல்லாம் உலறிக்கொண்டு வருகிறார் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் சாமியார், பேசிய பிரளயம் பற்றிய செய்தியை, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கூட்டமே தற்போது விவாதித்துக்கொண்டு இருக்கிறது.

அதாவது, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ பவித்ரா காளி மாதா என்ற பெண், அந்த பகுதியில் புகழ் பெற்ற பெண் சாமியாராக இருந்து வருகிறார். 

இந்த பெண் சாமியார், சமீபத்தில் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். 

அப்போது, சொகுசு காரில் வந்த அந்த பெண் சாமியார், தனது முகத்தில் சாயம் பூசிகொண்டும், உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டும், கழுத்தில் நிறைய தங்க நகைகளை அணிந்துக்கொண்டும், தலைமுடியிலும் சாயம் அடித்திருந்த நிலையில் சென்றிருக்கிறார்.

அதன்படி, திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் இருக்கும் காளி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்ற அந்த பெண் சாமியார், அந்த கோயிலுக்கு வந்த சக பக்தர்களுக்கு குங்குமிட்டு ஆசி வழங்கினார்.

அப்போது, பக்தர்கள் முன்பு பேசிய அந்த பெண் சாமியார், “சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது என்றும், அது முதல் காளிமாதா வழிபாட்டில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்” என்றும், குறிப்பிட்டார்.

“இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன் என்றும். உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார்” என்றும் கூறிய அந்த பெண் சாமியார், “உண்ணாமலை அம்மன் போல் காளியும் - சிவனுக்கு மிகவும் விருப்பமானவள்” என்றும், கூறினார்.

அத்துடன், “அண்ணாமலையார் உத்தரவின் பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து நான் கிரிவலம் சென்று வந்தேன்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், “உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை” என்றும், அவர் குறிப்பிார். 

முக்கியமாக, “தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும் என்றும், அதன் பிறகு அமைதியான சூழ்நிலை உருவாகும்” என்றும், பீதியை கிளப்பினார். 

பெண் சாமியாரின் இந்த வார்த்தையை கேட்டு, அங்கு கூடியிருந்த சக பக்தர்கள் அப்படியே திகைத்துப் போனார்கள். அப்போது, அந்த பெண் சாமியார் பேசியரை சிலர் தங்களது செல்போனில் போட்டோ எடுத்த நிலையில், இந்த செய்தியும் தற்போது வைரலாகி வருகிறது.