தஞ்சை மருத்துவக் கல்லூரி கழிவறையில் சடலமாக பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், அந்த குழந்தையைப் பெற்று ஃபிளஷ் டேங்க்கில் போட்ட குழந்தையின் தாய் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறையில் இருக்கும் தண்ணீர் தொட்டியில், பிறந்த பெண் சிசு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

அதாவது, அந்த மருத்துவ கல்லூரியின் தூய்மை பணியாளர் ஒருவர், அங்குளள கழிவறையை சுத்தம் செய்ய சென்ற போது, அங்கு குழந்தை ஒன்று படு கொலை செய்யப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். 

இதானால், பதறித் துடித்த அந்த தூய்மை பணியாளர், இது குறித்து உடனடியாக மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் போலீசாருக்கும் தகவல் கொடுத்து உள்ளார்.

இதையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது, நைட்டி அணிந்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவர், தலையில் குல்லா மாஸ்க் அணிந்த படி கழிவறைக்குச் சென்றுவிட்டு, சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு தான் கழிவறையிலிருந்து வெளியே வருவது தெரிய வந்துள்ளது. 

இதனால், அந்த பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் இது குறித்து தங்களது விசாரணையை தொடங்கினார்கள்.

அதன்படி, தஞ்சை மருத்துவக் கல்லூரி கழிவறையில் சடலமாக பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையைப் பெற்று ஃபிளஷ் டேங்க்கில் போட்ட பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

மேலும், தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த பிரியதர்சினி தான் அந்த பெண் என்பதையும் போலீசார் கண்டுப்பிடித்தனர்.

அத்துடன், தான் பெற்ற தனது பச்சிழம் குழந்தையை, அவரே கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, பிரியதர்சினியை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், “முறையற்ற கள்ளக் காதல் உறவில் குழந்தை பிறந்ததால், இந்த குழந்தையை கொன்றதாக” குழந்தையை கொலை செய்த தாய் பிரியதர்ஷினி போலீசார் வாக்குமூலம் அளித்து உள்ளார். 

இதனையடுத்து, “யார் அந்த கள்ளக் காதலன்?” என்கிற ரீதியில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பும் ஏற்பட்டது.