தமிழகத்தில் அரசு பேருந்தகளை இயக்குவது பற்றி போக்குவரத்து துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்தியா உட்பட உலக உலக நாடுகளில் கொரோனா தாக்கத்தின் 2 ஆம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. 

இதனால், தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இவற்றுடன், டாஸ்மாக் கடைகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

அத்துடன், “கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களை காட்டிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று கூடுதலாக பதிவாகி வருவதால், இந்த 11 மாவட்டங்களில் மட்டும் கூடுதலான கட்டுப்பாடுகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.

எனினும், கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி உள்ளிட்ட பல்சேறு அத்திவாசிய பணிகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க, தமிழக போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இது தொடர்பான முறையான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக, பேருந்துகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றும், குறிப்பிட்டு உள்ளனர்.

அத்துடன், தமிழக அரசு முறையான அறிவிப்ப வெளியிட்ட உடன், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழி முறைகளைப் பின்பற்றி, பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும், வரும் 21 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் மிக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்க வாய்ப்புகள் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் கூறினார்.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது பற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சற்று முன்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையில், “கொரோனா தொற்று பரவலால் மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவது” குறித்து ஆலோசனை மேற்கொள்ள்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 

மேலும், தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், பேருந்துகளை இயக்குவது பற்றிய சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமாக, தமிழகத்தில் அரசு பேருந்தகளை இயக்குவது பற்றிய அறிவிப்பு, இந்த வார இறுதியில் வெளியிடப்படலாம் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.