“சீரியல் நடிகை மைனா நந்தினாயில் இரவில் எனக்குத் தினமும் தொல்லை” என்று அரசியல் பிரமுகர் ஒருவர் தூக்கம் தொலைத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் குருநாதன், என்கிற அரசியல் பிரமுகர், அங்குள்ள அந்தியூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

Tamil serial actressmyna nandhini tn politician

அதில், “தினமும் இரவு 10 மணிக்கு மேல், நிறைய செல்போன் அழைப்புகள் மாறி மாறி வரும் என்றும், போனை அட்டன் செய்து பேசினால், நான் ஆணா, பெண்ணா என்பதைக் கூட குரல் மூலம் அறிந்துகொள்ளாத முடியாத வேகத்தில், “மைனா, நீங்கள் ரொம்ப அழகா இருக்கிங்க. உங்கள் படம் எல்லாம் சூப்பர். நீங்க நடிக்கிற சீரியல் உங்களுக்காகவே நான் தினமும் பார்ப்பேன்” என்று வலிந்து வலிந்து, காமத்திற்கு ஏங்கித் தவிக்கும் ஆண்கள் தினமும் எனக்குத் தொல்லை” கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

“பல மாதங்கள் இப்படிதான் தினமும் எனக்கு இரவு நேரங்களில் போன் வரும். சில நேரங்களில் உனக்கு என்ன விலை? என்றும் அத்துமீறி கேட்பார்கள் என்றும் கவலை” தெரிவித்துள்ளார்.

Tamil serial actressmyna nandhini tn politician

“இது குறித்து நான் ஆராய்ந்தபோது, சீரியல் நடிகை மைனா நந்தினியின் பெயரில், போலியான முகநூல் கணக்கு ஒன்றைத் தொடங்கி, யாரோ அதில் என்னுடைய போன் நம்பரை பதிவு செய்திருக்கிறார்கள்” என்பது தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், “தினமும் நான் தூக்கம் இன்றி தவிப்பதாகவும், இரவு நேரத்தில் எனக்கு வரும் போன் தொல்லையால், நான் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும்” அரசியல் பிரமுகர் குருநாதன் குற்றம்சாட்டி உள்ளார்.

Tamil serial actressmyna nandhini tn politician

மேலும், போலியான முகநூல் தொடங்கி, அதில் என் போன் நம்பரை பதிவு செய்தவரைக் கைது செய்ய வேண்டும் என்றும், போலியான முகநூல் பக்கத்திலிருந்து எனது நம்பரை நீக்க வேண்டும் என்றும், அந்த மனுவில் குருநாதன் வலியுறுத்தி உள்ளார்.