தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களுக்கு என்று தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்து, போக்குவரத்துதுறை அசத்தல் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
 
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் படி, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான தமிழக அரசின் மாநாகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம், பெண்களுக்கான முதல் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், பெண்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அடுத்தடுத்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே,  அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களுக்கு என்று தனியாக படுக்கை வசதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக இன்றைய தினம் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி செய்து கொடுக்கப்படும்” என்று, அறிவித்து உள்ளது.

அத்துடன், “பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்து தர, தமிழக போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், “தமிழக அரசின் விரைவு பேருந்துகளான குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா அரசுப் பேருந்துகளில் 1UB மற்றும் 4UB இருக்கைகளை ஒதுக்க வேண்டும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “அரசுப் பேருந்து புறப்படும் வரை, பெண்கள் முன்பதிவு செய்யாத பட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்றவர்களுக்கு ஒதுக்கலாம்” என்றும், தமிழக போக்குவரத்துத் துறை, அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

முக்கியமாக, “தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான தனிப்பட்ட வசதியை கருத்தில் கொண்டே, அவர்களுக்கு என்று, தனியாக தற்போது பிரத்யேக படுக்கை வசதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக” தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.