தமிழ்நாடு சிமெண்ட் கழகம் வலிமை எனும் சிமெண்டை இன்று அறிமுகம் செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.valimaiதமிழக அரசின், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடட் சார்பில் தயாரிக்கப்படும் அரசு சிமெண்ட் இன்று முதல் வலிமை சிமெண்ட் எனும் பெயரில் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் சிமெண்ட்டின் சில்லறை விற்பனை விலை மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வலிமை சிமெண்ட் விற்பனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது: 
தமிழ்நாடு சிமெண்ட் கழகம் வலிமை எனும் சிமெண்டை இன்று அறிமுகம் செய்துள்ளது. முதல்வர் அதை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.

மேலும் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால் 17 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும் நிலையில் இந்த வலிமை சிமெண்ட் மிக சிறந்த தொழில்நுட்ப வசதிகளோடு அதிக உறுதி தன்மை வாய்ந்ததாக , வெப்பத்தை தாங்கும் தன்மை கொண்ட சிமெண்டாக வலிமை சிமெண்ட் திகழ்கிறது. வலிமை சிமெண்ட் விலையை பொறுத்த வரையில் ppc 350 ரூபாய்க்கும் வலிமை opc 356 ரூபாய்க்கு எனவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம் 30000 மெட்ரிக் டன் இப்போதைக்கு உற்பத்தி செய்யப்படும் என தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்கள் அனைவரும் குறைந்த விலையில் பயன்படுத்த கூடிய வகையில் சிமெண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சிமெண்ட் அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்தபட்டது. மேலும் பொதுமக்களுக்கு வெளிசந்தையில் வலிமை சிமெண்ட் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் முதல்வர் இந்த வலிமை சிமெண்டை அறிமுகப்படுத்தி உள்ளார் எனவும் இன்றைக்கு இருக்கும் மூல பொருட்கள் விலைகளை அடிப்படையாக கொண்டே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப வலிமை சிமெண்ட் உற்பத்தி அதிகரிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இந்நிலையில் அரசு சிமெண்ட்டான  அம்மா சிமெண்ட் நடைமுறையில் உள்ளது எனவும் புது பிராண்டாக வலிமை சிமெண்ட் கொண்டு வரப்பட்டுள்ளது. நிலக்கரியின் விலை சந்தையில் கூடி உள்ளதால், சிமெண்ட் விலை கூடி உள்ளது. மேலும் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.