PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை விவகாரத்தைத் தொடர்ந்து, பிரபல விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் இளம் வீராங்கனை ஒருவர், தனது பயிற்சியாளர் மீது தமிழ்நாடு மாநில தடகள சம்மேளனத்தில் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

சென்னை பாரிமுனையில் தடகள பயிற்சியாளரான நாகராஜன் என்பவர், சொந்தமாக விளையாட்டு பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். 

இந்த பயிற்சி மையத்தில், தடகள வீராங்கனையாக சாதிக்க வேண்டும் என்று கனவுகளுடன், அதே சமயம், பொருளாதார வசதிகள் இல்லாத ஏழை மாணவிகள் ஏராளமானோர் அங்கேயே தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த பயிற்சி மையத்தில், மிகவும் ஏழை மாணவிகளாக உள்ளவர்களுக்கு, பயிற்சியாளர் நாகராஜன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், அங்கு பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஏழை மாணவிகள் ஏராளமானோர், வேறு ஒரு பயிற்சி மையத்திற்கு மாற முடியாமலும், பாலியல் தொந்தரவை வெளியே வேறு யாரிடமும் கூற முடியாமலும் தவித்து வருகின்றன. 

அத்துடன், பயிற்சியாளர் நாகராஜன், சென்னை ஒய்.எம்.சி.ஏவில் உள்ள தனது வீட்டில் வைத்து 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த போது, அந்த பெண் நாகராஜனை கொலை செய்ய முயன்றதும், தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பயிற்சி முடிந்த பிறகு ஒரு மாணவியை மட்டும் நாகராஜன் கடைசியாக இருக்க சொல்வதாகவும், அதன்படி மற்ற மாணவிகள் சென்ற பிறகு கடைசியாக இருக்கும் மாணவிக்கு நாகராஜன் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரிடம் பயிற்சிபெறும் பல மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.

இப்படியாக, பயிற்சியாளர் நாகராஜன், 20 க்கும் மேற்பட்ட ஏழை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாராகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பயிற்சியாளர் நாகராஜனால் பாலியல் தொந்தரவுக்குள்ளான வீராங்கனைகள் பலர், விளையாட்டிலிருந்து தற்போது வெளியேறி உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
குறிப்பாக, பயிற்சியாளர் நாகராஜன் குறித்து, ஏற்கெனவே இளம் பெண் ஒருவர் புகார் அளித்தபோது, “அந்த பெண் காதலிப்பதைக் கண்டித்ததால் தன், தன் மீது பொய் புகார் சுமத்துவதாக” கூறி, நாகராஜன் தப்பித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன், 20 க்கும் மேற்பட்ட பயிற்சி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர், தமிழ்நாடு மாநில தடகள சம்மேளனத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறக்கூடிய பல மாணவிகளும், மாணவிகளின் பெற்றோர்களும் தொடர்ந்து பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார் சுமத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பாலியல் குற்றச்சாட்டானது, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கவனத்துக்கு தற்போது வந்துள்ளது. 

இதனையடுத்து, இந்த பாலியல் புகார் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை போலீசார் தற்போது தொடங்கி உள்ளனர். 

இந்த விசாரணையில், பயிற்சியாளர் நாகராஜன், சென்னையிலேயே சுங்கத்துறை கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.