அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி.என்.பி .எஸ் .சி போட்டி தேர்வுகளுக்கான திட்ட அறிக்கையை டி.என்.பி .எஸ் .சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.

Tnpsc

டி .என்.பி.எஸ் .சி தலைவர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குரூப் -2, 2ஏ  நிலைகளில் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளது  குரூப் -4 நிலையில் பழைய காலி பணியிடம் 5255 மற்றும்  புதிய காலி பணியிடம் 3000 உள்ளது. குரூப் 2-தேர்வு தேதி  பிப்ரவரி மாதத்திலும் . குரூப் -4 தேர்வு தேதி மார்ச் மாதத்திலும்  தேதி அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்கு பின்னர் தேர்வு நடத்தப்படும் என்றும்  அடுத்த ஆண்டு 32-க்கும் அதிகமான தேர்வுகள் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நிகழாதவாறு ஓ.எம்.ஆர் தாள்கள், மை, விடைத்தாள் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளில் விடை எழுத அளவோடு இடம் விடப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யாரும் தற்போதும் பணியில் இல்லை.தேர்வருக்கு சம்பந்தம் இன்றி தேர்வு மையம் இருந்தால் விளக்கம் கேட்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்தாளில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் அதுவும் கணக்கிடப்படும். டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் ஏற்றிவரும் லாரிகளை ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என டி .என்.பி.எஸ் .சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மின்வாரியம், பொதுப்பணித்துறை, நியமனத்தில் தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்த்றை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசனை வெளியிட்டதுள்ளது.