வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு தள்ளிவைத்தது.

rajendra balaji

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. அவரது உதவியாளரிடமும் ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்திருந்ததாகவும் மேலும் கட்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் இந்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கடந்த மாதம் 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பண மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று காலை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையில் நேற்று காலை விருதுநகரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்.பி.மனோகரன் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் தனிப்படை போலீஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட அவரை தனிப்படை போலீசார் நேற்று தமிழ்நாடு அழைத்து வந்தனர். பின்னர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் ராஜேந்திரபாலாஜி விசாரணைக்காக நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து  ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி பரம்வீர் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிட்டப்பட்டது. ஆனால் போலீசார் தரப்பில் ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, வரும் 20-ம் தேதி வரை ராஜேந்திர பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நேற்று கைதான நிலையில் அவரது முன் ஜாமீன் மனு  மீதான விசாரணை நடைபெற்றது. ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்தோம். அதற்குள் கைது செய்ய என்ன அவசரம். இது அரசியல் உள் நோக்கம் கொண்ட வழக்கா என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகிய  3 பேரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை  விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார் கடந்த 5-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்தனர். பின்னர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன கேட்டு ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, ‘கொரோனா காலத்தில் தேவையில்லாமல் ஒருவரை சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும், 7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் தேவையில்லாமல் ஒருவரை சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம்  ஏற்கனவே மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ராஜேந்திர பாலாஜி எவ்வித பெரும் குற்றத்தையும் செய்யவில்லை என வாதிட்டார்.

மேலும் இதில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக 32 பேர் புகார் அளித்துள்ளனர். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியை அறிந்து தலைமறைவானார். எனவே அவரை கைது செய்வதுதான் சரியாக இருக்கும் என காவல்துறை நினைத்தது. அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு அரசியல் காரணங்களுக்கானது என்று கூறுவது அடிப்படையற்றது’ என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு மாதம் ஜாமீன் அளிக்கவும், ஒரு மாதத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்கவும் யோசனை தெரிவித்தனர். அப்போது, இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை நாளை மறுதினம் தாக்கல் செய்வதாகவும் அதன்பிறகு முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நாளை மறுதினத்துக்கு தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.