ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம்  கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, சென்னை சென்ட்ரல், தாம்பரம், அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவது கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 6 முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் மட்டும் பிளாட்பாரம் டிக்கெட்கள் வழங்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அனுமதித்தது. 

மேலும் கொரோனா  காரணமாக மக்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்தில் கூடாமல் இருக்கும் வகையில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 6 ரயில் நிலையங்களில் மீண்டும் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் பிளாட்பாரம்  கட்டணம் ரூ.10-லிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் நோக்கிலான புதிய கட்டணம் உயர்த்தி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலைமை சீரடைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ள காரணத்தினால், ரயில் நிலையங்களில் பிளாட்பாரம்  டிக்கெட்டின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக குறைந்தது.