6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, 57 வயதான கணக்கு வாத்தியார் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இப்படியான ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

அதுவும், வட மாநிலங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் எல்லாம் தற்போது தமிழகத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறி வருவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் தான், தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சங்கம்விடுதியில் இப்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கிறது.

அதாவது, கறம்பக்குடி அடுத்து உள்ள சங்கம்விடுதியைச் சேர்ந்த 57 வயதான சீனியப்பா என்ற ஆசிரியர், அங்குள்ள துவார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான், அந்த பள்ளியில், 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாடம் எடுத்து வந்திருக்கிறார் 57 வயதான சீனியப்பா ஆசிரியர்.

அப்போது, தன்னிடம் படித்து வந்த 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மீது சபலப்பட்ட அந்த ஆசிரியர், அந்த மாணவி மீது ஆசை வைத்து, ஒரு கண் வைத்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், அந்த ஆசிரியர் அடிக்கடி அந்த 6 ஆம் வகுப்பு மாணவிக்கு கணக்கு சொல்லிக்கொடுக்கும் சாக்கில், அந்த மாணவியின் அருகே வரவழைத்து அந்த மாணவியின் மேல் கை வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும், கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, மாலையில் வீடு திரும்பியதும் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த ஆசிரியர் சீனியப்பாவை ஆலங்குடி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், 6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த புகாரில், சம்மந்தப்பட்ட ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, மாவட்ட எஸ்.பி., மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். 

அதன்படி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை, சீனியப்பாவிடம் போலீசார் வழங்கினர். இதனையடுத்து, அவர் தற்போது திருச்சி மத்திய சிறையில் அதிரடியாக அடைக்கப்பட்டார்.

இதனிடையே, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 57 வயது ஆசிரியர் ஒருவர், அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம், சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.