இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தின் மகனான இளவரசர் பிரின்ஸ் மீது அமெரிக்கப் பெண் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கை அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசர்களில் ஒருவருமான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது, கடந்த காலங்களில் பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது. 

அதாவது தற்போது 61 வயது ஆகும் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதுவும், இங்கிலாந்து இளவரசர் மீது அமெரிக்கப் பெண் ஒருவர் தான் இந்த பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தி, இது தொடர்பாகவும் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

அதாவது, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றிருந்ததாகவும், அப்போது அவருக்கு ஜெப்ரி எப்ஸ்டின் என்பவர் தனது காதலியான விர்ஜீனியா ஜிப்ரே என்ற இளம் பெண்ணை அறிமுகப்படுத்தியதாகவும், அந்த சமயத்தில் தான் விர்ஜீனியாவுக்கு, இளவரசர் பிரின்ஸ் ஆண்ட்ரூ செக்ஸ் தொல்லை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன், அந்த நேரத்தில் விர்ஜீனியாவுக்கு 17 வயது தான் ஆகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி, மைனர் சிறுமியான விர்ஜீனியாவை மிரட்டி பலவந்தமாக இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் உறவு கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி அப்போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால், தற்போது விர்ஜினீயாவுக்கு 37 வயது ஆகிறது என்றும் கூறப்படுகிறது. 

இதனால், “தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவதாகத் தெரிவித்துள்ள அந்த பெண், இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நீதிமன்றத்தில் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். 

இது குறித்து விசாரணை நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.

சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த விசாரணையில், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி லீவிஸ் ஏ.கப்லன் கூறினார்.

குறிப்பாக, இந்த வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டு, அதன் பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் விசாரணை தொடங்கும் நாளானது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இது ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் விர்ஜீனியாவின் காதலர் ஜெப்ரி எப்ஸ்டீன், தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காதலர் ஜெப்ரியின் தற்கொலைக்கு இளவரசர் மீதான செக்ஸ் புகாரில் தன்னிடமும் விசாரணை நடத்தக்கூடும் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இந்த வழக்கில், தற்கொலை செய்துகொண்ட ஜெப்ரி எப்ஸ்டீனின் முன்னாள் காதலியும் இந்த வழக்கில் தற்போது சாட்சியாகச் சேர்க்கப்பட்டு உள்ளார். 

இதனிடையே, இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தின் மகன் மீது செக்ஸ் புகார் எழுந்துள்ள சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.