பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்! - மருத்துவமனை அறிவிப்பு

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்! - மருத்துவமனை அறிவிப்பு - Daily news

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த 10ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
ஆனால் வயது முதிர்வு காரணமாக சிகிச்சைக்கு அவர் உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. விளைவாக, அடுத்தடுத்த நாள்களில் அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. அதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி. ஆனாலும் நிலைமை சீராகவில்லை. சில நாட்களுக்கு பிறகு அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்திருந்தார்.

அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் இதுபற்றி சமீபத்தில் கூறும்போது, அவர் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், அவர் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி ராணுவமருத்துவமனை இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், “பிரணாப்பின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என கூறப்பட்டிருந்தது.

நேற்றும் அவரது உடல்நிலை அதே நிலையில் இருப்பதாக மருத்துவமனை கூறியிருந்தது. கூடுதல் தகவலுக்காக, நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகரித்திருப்பதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியால் செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், கடந்த சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் #ripPranabMukherjee என பலர் பதிவிட்டு வந்தனர். அதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் பற்றி பல்வேறு செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன. ``எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தகவல் தெரிவித்த பின்னரே, சூழல் கட்டுக்குள் வந்தது. இருப்பினும் பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 15, சுதந்திர தின விழாவன்று, அவரது மகள், ஷர்மிஷ்டா முகர்ஜீ, தனது தந்தை பிரணாப் முகர்ஜீ அவர்கள் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பழைய படங்களை பகிர்ந்து கொண்டார். 

அதில் அவர், பிரணாப் முகர்ஜீ அவர்கள் சிறுவயதில் இருந்தே, தனது தந்தை மற்றும் மாமாவுடன் தனது சொந்த கிராமத்தில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில், கொடி ஏற்றுவார்கள் என்றும், அப்போதிலிருந்து அவர் சுதந்திர தினத்தன்று ஒரு வருடம் கூட மூவர்ண கொடியேற்றி கொண்டாட தவறியதில்லை எனவும் அவர் அந்த நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அடுத்த வருடம், தனது தந்தை அதே போன்று சுதந்திர தினத்தில் மூவர்ண கொடி ஏற்றுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

இந்நிலையில் இன்று அவரின் உடல்நிலை பற்றிய பாசிடிவ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலறிக்கையில், ‘வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தபோதிலும், பிரணாப் முகர்ஜியின் சுவாச அளவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருக்கின்றன. மருத்துவ நிபுணர் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது’ என்றும் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டிய பலரும் வாழ்த்தும், பிராத்தனைகளும் செலுத்தி வருகின்றனர்.

Leave a Comment