நகைக்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் உடல் நலக்குறைவால் நேற்று மாரடைப்பால் காலமானார். திரை உலகைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கிரீன் கலாம் என்ற அமைப்பின் மூலம் தமிழகமெங்கும் மரம் வளர்ப்பை முன்னெடுத்து வந்தார். 


முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமோடு நல்ல நட்பு பாராட்டியவர். அந்த உறவின் அடையாளமாக கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தொடர்ந்து இயங்கி வந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 


நடிகர் விவேக்கின் 1 கோடி மரங்கள் நடும் கனவை நினைவாக்கும் வகையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு உறுதிமொழி எடுத்த விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர், அதனைத் தொடர்ந்து அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.


மேலும் திருவாரூரில் வனம் அமைப்பின் சார்பில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர்.