தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்ககடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில்  அதி கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் தென் கிழக்கு வளைகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழ்நாட்டில்  வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் தமிழ்நாடு நோக்கி நகர உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது

தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் சென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 2015-க்கு பின் சென்னையில் மீண்டும் 205 மி.மீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னை தவிர்த்து மற்ற சில மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பல இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர்,சேலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழையை முன்னிட்டு இன்று சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் இரு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.