புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருதால்,  தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை, இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

வங்க கடல் பகுதியில் இன்று உருவாகும் புதிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10 ஆம் தேதியான நாளை மற்றும் 11 ஆம் தேதியான நாளை மறுதினம் என அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் கன முதல் அதிக கன மழையும் என்றும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வழக்கமாக அதிப கன மழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ஆய்வு மையத்தால் வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும். 

அந்த வகையில் பார்க்கும் போது, அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ள இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், மிக கன மழை பெய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களுக்கு தற்போது ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு இருக்கிறது.

அதன்படியே, நாளைய தினம் 10 ஆம் தேதி கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 

அதே போல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

அதே போல் 11 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 

மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக, ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 20 சென்டி மீட்டர் முதல் 25 சென்டி மீட்டர் வரையில் மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

மிக முக்கியமாக, 12 மணிநேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. 

இதனிடையே, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.