இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் யாழ்ப்பாணத்தில்  இரவோடு இரவாக இடிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


2018ம் ஆண்டு இந்த நினைவிடம் கட்டும் போதே இலங்கை உயர்கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் கட்டுமான பணிகளை நிறுத்த முயன்றது. ஆனால் இந்த நினைவிடம் கட்டும் பணிகளை தடைகளை மீறி மாணவர்கள் வெற்றிகரமாக கட்டி முடித்தனர். பிறகு மீண்டும் ராஜபக்சே சகோதரர்களின் மீண்டும் நினைவிடத்தை இடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தனர். இருப்பினும்  தமிழ் தேசிய கட்சியினர் முயற்சியால் அந்த முறையும் நினைவிடம் காப்பாற்றப்பட்டது. 


நேற்று இரவு மீண்டும் நினைவிடத்தை தகர்க்கும் பணி தொடங்கியிருக்கிறது. மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி உள்ளனர். இருப்பினும் பொக்லைன் இயந்திரம் மூலம் தகர்த்து தரைமட்டமாகி  உள்ளது இலங்கை அரசு.