சில தினங்களுக்கு முன், திமுகவில் முக்கிய பொறுப்பிலிருந்து எம்.எல்.ஏ கு.க.செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லிக்கு சென்று, நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கு.க.செல்வம் பேசிய போது, திமுக தலைமை மீது மிகக்கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக விடுவிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. 

திமுக கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதையொட்டி, அவரைத் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. 

இதற்கிடையில் அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றுவிட்டதாக கூறிய கு.க.செல்வம், பதில் கடிதமொன்றை தலைமைக்கு எழுதினார். அதில்,

``தங்களுடைய 05.08.2020 தேதியிட்ட நோட்டீஸ்‌ கிடைக்‌கப் பெற்றேன். கிடைத்த 7 நாட்களுக்குள்‌ பதில்‌ அளிக்க வேண்டும்‌ என்றும்‌ _ பதில்‌ அளிக்கவில்லை என்றால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று: கூறப்பட்டுள்ளது. ஆனால்‌ நடவடிக்கை எடுத்து என்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள்‌.

ஆகவே என்‌ பதில்‌ கிடைக்கும்‌ முன்னரே நான்‌ குற்றவாளி என்று ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே என்னை தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே தங்களின்‌ தற்காலிக நீக்கத்தை வாபஸ்‌ பெறுமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

மேலும்‌ தங்கள்‌ நோட்டீஸ்க்கு நான்‌ விபரமாக விளக்கம்‌ அளிப்பதற்கு சில விவரங்கள்‌ தேவைப்படுகின்றன. தாங்கள்‌ விவரங்கள்‌ இல்லாமல்‌ மேலோட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸில்‌ நான்‌ பொய்யான தகவல்கள் சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன பொய் என்று குறிப்பிடப்படவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் ஸ்டாலின் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ``தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இந்த காரணத்தினால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.