கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 மேற்பட்ட கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குமரியில் ஆய்வு மேற்கொள்கிறார்.

stalinதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 1வாரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவந்தது . கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 13-ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது.இதன் காரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடானது. 

இதனையடுத்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். மேலும் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குமரி  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளத்தில் சூழுந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது . கால்வாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் பல சாலைகள் சேதமடைந்து கடும் வெள்ளத்தால் மக்கள் சிக்கித்தவிக்கிறனர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்துக்கு அனுப்பிவைத்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன் நேற்று குமரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து  குமரி மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று குமரி மாவட்டம் செல்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் வந்து செல்லும் பகுதிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் முதலவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் காலையில் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வரும் முதல்வர்  அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தோவாளை பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார் . அதனை தொடர்ந்து பேச்சிப்பாறை பகுதிக்கு சென்று அணை மற்றும் வெள்ள சேத பகுதிகளையும், மணவாளக்குறிச்சி பெரிய ஏலா பகுதியில் வெள்ள சேத பகுதிகளையும் பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதனையடுத்து நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மதிய உணவு அருந்துகிறார். அதன் பின்னர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வெள்ள சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வு கூட்டம் முடிந்ததும்  மாலையில் கார் மூலம் நெல்லைக்கு  புறப்பட்டு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் வந்து செல்லும் பகுதிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.